Home videos புகழ் பெற்றுவரும் மலர் மருத்துவம் | மருத்துவத் துறையில் புதிய சாதனை!

புகழ் பெற்றுவரும் மலர் மருத்துவம் | மருத்துவத் துறையில் புதிய சாதனை!

3042
0
Share

எல்லாவிதமான நோய்களுக்கும் உளவியல் மாறுபாடுகளே முக்கியக் காரணம் என்று உளவியல் துறை கண்டுபிடித்திருக்கிறது. அந்த வகையில் மரபுவழி மருத்துவங்களும், மாற்று மருத்துவங்களும் இன்றைய காலத்தில் மிகத் தேவையாக இருக்கின்றன.
அந்த வகையில் மலர்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொண்டு செய்யப்படும் மலர் மருத்துவம் இன்று புகழ்பெற்று வருகிறது.
இவ்வகை மருத்துவத்தை தமிழ் மரபுவழியில் ஏற்கனவே கையாண்டிருந்தாலும், பிற்காலத்தில் முறையாக டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவரே வழிமொழிகிறார். மருந்து பற்றிய இளங்கலை (MBBS), சமூக நலம் பற்றிய பட்டயம் (DPH) ஆகியவற்றை முடித்துவிட்டு அறுவைசிகிச்சை நிபுணர்கள் உள்ள அரச கல்லூரியில் (MRCS) உறுப்பினராகிறார். அங்கேயே முதுகலைக்கு ஈடான பட்டம் (BACTERIOLOGIST) பெறுகிறார். பிறகு நோய்க்குறிகளைக் கண்டறியும் முனைப்பாக ஓமியோபதித் துறையிலும் (PATHOLOGIST) பட்டம் பெறுகிறார்.
இப்படியாக, அனுபவங்களைப் பெற்றவுடன், மருத்துவத் துறையில் ஓர் அறிவியலாளராக துறைசார்ந்த ஆராய்ச்சியை எளிமைப்படுத்துகிறார். இயற்கையோடு ஒன்றிவாழப் பழகுகிறார். மக்களுக்கு மிக எளிமையான் முறையில் மருத்துவம் செய்யும் பேரார்வத்தோடு மலர்களிலிருந்து மருத்துவம் செய்யும் முறைமையினைக் கண்டுபிடிக்கிறார். அதனாலேயே மலர் மருத்துவ முறையை பாட்ச் மருத்துவம் என்று விளிக்கிறார்கள்.
இந்த மருத்துவமுறையானது நோயாளிகள் தங்களின் நோய்களை தாங்களே கண்டறிய வழிவகை செய்கிறது. தனக்குத் தானே குணமாக்கும் கலையினைச் சொல்லித் தருகிறது.

மலர் மருத்துவத்தின் பயன்கள்:
* மனவலிமை தருகிறது.
* பலவகையான பயங்களைப் போக்குகிறது.
* வெறுப்பு, பொறாமை, சந்தேகம் ஆகியவற்றைப் போக்குகிறது.
* தற்கொலை எண்ணத்தை மாற்றி தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது.
* எல்லவிதமான அதிர்ச்சிகளையும் சரிசெய்து மன அமைதியையும் துணிவையும் தருகிறது.
* எப்படிப்பட்ட மயக்கத்தையும் தெளியவைக்கிறது.
* பதற்றத்தோடும் அவசரத்தோடும் வேலை செய்பவர்களுக்கு நிதானத்தைத் தருகிறது.
* சோர்வு, குழப்பங்களை நீக்கி தெளிவைத் தருகிறது.
* சுயநலம் உள்ளவர்கள், ஆதிக்க மனப்பன்மை கொண்டோரை அன்பும் பாசமும் உள்ளவர்களாக மாற்றுகிறது.
* கருத்துவேறுபாட்டைப் பொறுக்காமல் கடுமையாகப் பேசும் குணத்தை மாற்றி அமைதிப் படுத்துகிறது.
* எந்த வேலையையும் தள்ளிப் போடாமல் சரியான நேரத்தில் செய்துமுடிக்கத் தூண்டும்.
* அலோபதி மருந்தினால் சேர்ந்த நச்சுத்தன்மையைப் போக்கும்.
* மாணவர்கள் புதிய பாடத்தை எளிதில் புரிந்து படிக்க உதவும்.
* பாடத்தில் கவனம் செலுத்தவும், கவனித்த பாடத்தை மனதில் பதிய வைக்கவும் உதவும்.
* தவறுகளைத் திருத்திக்கொள்ள விழிப்புணர்வு தரும்.
* தொடர்ந்து ஒரே எண்ணம் ஓயாமல் வந்து தொல்லை தந்தால் அதைத் தடுக்கும்.
* தேவையானபோது உறக்கம் தரும்.
* உயர்வு மனப்பன்மையால் ஒதுங்கி நிற்பவர்களை சமத்துவமும் நட்பும் கொள்ள வைக்கும்.
* ஒப்பற்ற உயர்வான புதிய வாழ்வை அளிக்கும்.
* வாழ்க்கையின்மீதான நம்பிக்கையையும் பிடிப்பையும் தரும்.
இப்படியாக இன்னும் பல நன்மைகள் தரும் இம்மருத்துவம் பக்கவிளைவு அற்றது. ஓவர் டோஸ் பயமில்லை. இயற்கையின் ஆற்றலை நமக்குள் கொண்டுவருகிறது.
-தமிழ் முதல்வன்

மேலும் இம்மருத்துவத்தைப் பற்றி அறிய:
முனைவர் சூ.பாக்கியராசு
ராஜூஸ் செரனிட்டி அடுக்ககம்,
அகம் ‘பி’ 16/2, நியூ நடராஜபுரம்,
அய்யாவு காலனி, அமைந்தகரை,
சென்னை-600029
பேச: 9884184734 / 7358727871 / 044 23633734


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here